search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரேயா சரண்"

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, திருமணம் செய்து சுற்றுலா சென்று பனிமழையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். #ShriyaSaran
    ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

    தமிழில் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த ‘நரகாசூரன்’ படம் ரிலீசுக்குத் தயாராகி இருக்கிறது. சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா.



    அதில், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை’ பாடலை பாடுகிறார் ஸ்ரேயா. ‘புது வெள்ளை மழை’ பாடலில், பனிப் பிரதேசத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, தற்போது அதை பாடி உள்ளார் ஸ்ரேயா. #ShriyaSaran

    ஸ்ரேயா தற்போது தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ வீடியோவில் அவரது பிறந்தறாளில் வெளியாகிய நிலையில், அதில் ஸ்ரோயா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran
    நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.



    நேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
    சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

    பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

    தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

    தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

    எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.



    தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

    அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

    எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `நரகாசூரன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Naragasooran
    `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நரகாசூரன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. 

    இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 



    கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. #Naragasooran #AravindSwamy

    ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ShriyaSaran
    திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா.

    ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆகவில்லை.

    மாறாக இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.

    Smiles and laughter

    A post shared by @ shriya_saran1109 on


    அங்கு தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிங்க் நிற பிகினி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #ShriyaSaran

    திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருக்கிறார். #ShriyaSaran
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

    திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

    தற்போது தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறி இருக்கிறார். #ShriyaSaran
    ×